இந்திய தேசிய கீதமான

 வங்க மொழிப் பாடலுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு?

எல்லா வார்த்தைகளுமே தமிழில் உள்ள தமிழர்த்தம் உள்ள வார்த்தைகளே.  தமிழுக்கும் வங்கத்துக்கும் உள்ள தொடர்பே வலியுறுத்தப்படுகிறது. மாறாக இங்கு ஜெயலலிதா போன்ற கொள்ளைகாரர்களின் தேசீயமாகிப்போன இந்திய தேசியத்தை முன்னிறுத்த முயற்சிக்கவில்லை.

“ஜன கண மன” வங்காள மொழியில் இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாகும்.

# 1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடக்கும்போது இப் பாடல் பாடப்பட்டது.

# 1950-ம் ஆண்டு ஜனவரியில்தான் “ஜன கன மண” இந்தியாவின் தேசிய கீதமாகவும், “வந்தேமாதரம்” தேசியப் பாடலாகவும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது. காண்க:

தேசிய கீதம்

ஜன கண மன அதிநாயக ஜெய ஹே

பாரத பாக்ய விதாதா.

பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா

திராவிட உத்கல வங்கா.

விந்திய இமாச்சல யமுனா கங்கா

உச்சல ஜலதி தரங்கா.

தவ ஷுப நாமே ஜாகே,

தவ ஷுப ஆஷிஷ மாகே,

காஹே தவ ஜெய காதா.

ஜன கண மங்கள தாயக ஜெயஹே

பாரத பாக்ய விதாதா.

ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,

ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.

  இப்பாடலின் பொருள்

இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற

நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.

நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும்

மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும்.

வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.

நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில்

எதிரொ லிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின்

இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால்

வணங்கப்படுகிறது.

அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரவுகின்றன.

இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு

வெற்றி! வெற்றி! வெற்றி!

வங்க மொழிப் பாடலுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு?

ஜன –  சனம், மக்கள்.

கண – குழு, மக்கள் கூட்டம்

மன – மனம்

அதிநாயக – உயர் நாயகன்

ஜெய ஹே – செயம், வெற்றி

பாரத – பாரதம்

பாக்ய – பாக்கியம், புண்ணியம்

விதாதா – விதிர்த்தல், உதிர்த்தல், அளித்தல்

பஞ்சாப – பஞ்சாப்

சிந்து – சிந்து (பாகிஸ்தான்)

குஜராத்த – குஜராத், கூர்ச்சரம்

மராட்டா – மராட்டியம்

திராவிட – திராவிடம்

உத்கல – உத்கலம், (ஒரிசா வின் முந்தைய பெயர்)

வங்கா – வங்காளம்

விந்திய – விந்திய மலைப்பகுதி (மத்தியப் பிரதேசம், மராட்டியம்)

இமாச்சல – இமாச்சலம் (இமயம்-சிமயம்-சிகரம்+ சலம் -நீர்-ஆறு- மலையிலிருந்து ஓடிவரும் ஆற்றுப்பகுதி)

யமுனா – யமுனை

கங்கா – கங்கை

உச்சல – உச்சம்  செல்லும், உயரும்

ஜலதி தரங்கா – கடலின் அலைகள். (கடலருகே இருக்கும் தரங்கம்பாடியை நினைவுகூர்வோம் தரங்கம்பாடி என்றால் அலைகளின் இடம் என்றே பொருள். காண்க:)

தவ -மிகுதியான காண்க:

ஷுப நாமே – சுப நாமம், மங்களப் பெயர்

ஜாகே –  செய பேரிக, வெற்றி முழக்கம்

தவ ஷுப – சுப நாமம், மங்களப் பெயர்

ஆஷிஷ – ஆசீர்

மாகே – வேண்டுதல் – மாகத என்றால் தமிழில் கேட்பு, வேண்டல் (மா கேட்பு – பெரும் வேண்டல்)

மாகதர், s. A particular tribe said to spring from a Kshatrya, or kingly, mother, and a Vaisya, or servile, father. Their profession is that of minstrels, who sing the praises and chivalrous exploits of sovereigns, and attend on the march of an army. காண்க:

தவ – உனது

ஜெய – செயம்

காதா. – அறிவித்தல் – காதை, [ *kātai, ] s. A story, a narrative, சரித் திரம். 2. Word, message, errand, news, செய்தி. 3. Uttering, declaring, telling, சொல்லுகை.  காண்க:

ஜன கண

மங்கள – சுப

தாயக – தாயக்கட்டை [ tāyakkaṭṭai ] சூதுகவறு. காண்க:

ஜெயஹே – செயம்

பாரத பாக்ய விதாதா – விளக்கம் ஏற்கனவே கண்டோம்

ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே, – வெற்றியே

ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே. – வெற்றியே